Sunday, May 24, 2015

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 25 முதல் விண்ணப்பம் விநியோகம்

Unknown  /  at  1:32 AM  /  No comments

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 25 முதல் விண்ணப்பம் விநியோகம்

பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 25 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குரிய சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 25 ஆம் முதல் வழங்கப்படுகிறது. ரூ. 50 கட்டணம் செலுத்தி தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வண்டி, மின்சார பணியாளர் ஆகிய தொழில் பிரிவுகளிலும், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்ற வைப்பவர் தொழில் பிரிவுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஜூன் 10 ஆம் தேதிக்குள் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Share

0 comments:

Copyright © 2013 Thiruvalandurai Village / Perambalur District .
.