பத்தாம் வகுப்பு மாணவனின்
கையை சிதைத்த பசும்பலூர் சாதி
கலவரம்..
பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவன் |
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில்
சுமார் 750 தலித் குடும்பங்களும், 700 வன்னியர்
குடும்பங்களும், 300க்கும் மேற்பட்ட உடையார்
சமுகத்தினரும் இதர சாதி மக்களும்
வசித்து வருகிறார்கள். கடந்த 1917 ஆம் ஆண்டு, ஊரின்
மையப்பகுதியில் எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான
இடத்தில் தமிழக அரசு சார்பில்
கிராம பஞ்சாயத்து அலுவலகம் (சாவடி) கட்டப்பட்டது.
பிரச்னைக்குறிய இடம் |
சப் கலெக்டர் விசாரணை |
டிக்கான சண்டை சாதிதீயாக உருமாறியது. பட்டா ரத்து செய்யப்பட்டதை பொருத்துக்கொள்ள முடியாத வன்னியர்கள் ஒன்றுசேர்ந்து தலித்களுக்கு ஆதரவாக இருந்த கட்டை ஆறுமுகம்(தலித்) என்பவரை படுகொலை செய்தார்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது, வழக்கமாக சாதிவெறியர்களை காப்பாற்றுவதில் முதல்பரிசு வெள்ளும் தமிழக காவல் துறை, இந்த வழக்கில் சாட்சியங்களை ஆஜர்படுத்த தவறியதால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்..
இந்நிலையில் கடந்த வருடம் பசும்பலூர்
தலித் மக்கள் மாவட்ட ஆட்சியாளர்
அவர்களிடம், ,மீண்டும் முறையிட்டு பிரச்னைக்குறிய சாவடி எல்லா சமூக
மக்களுக்கும் பொதுவானதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு
கொடுத்தனர்.
சம்பவத்திற்கு பிறகு குவிக்கப்பட்ட போலீஸ் |
இந்நிலையில் கடந்த 03.05.2015 அன்று தலித்கள் வசிக்கும்
தெருவில் உள்ள மக்கள் மாரியம்மன்
கோவில் திருவிழாவை விமர்சியாக கொண்டாடினர். இந்த விழாவிற்கு வரும்
பக்தர்களை வரவேற்க பேனர்களை அடித்து
தலித்கள் சாவடிக்கு அருகே வைத்திருந்தனர்.
இது வன்னியர்களுக்கு ஆத்திரத்தை
ஏற்படுத்தியது, நமக்கு சொந்தமான சாவடி
அருகே தலித்துகள் பேனர் வைப்பதா என
கொதித்த 200 வன்னியர்கள் திரண்டு, தலித்துகள் மாரியம்மன் கோவில் திருவிழாவை விமர்சியாக
கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் கொடுவ,கத்தி, வெடிகுண்டு,
தீப்பந்தம் போன்ற ஆயுதங்களை திரட்டியுள்ளனர்.
வீட்டுமாடியில் கற்களை சேகரித்து வைத்ததாகவும்
சொல்லப்படுகிறது. தாக்குதலுக்கு தயாராக இருந்த வன்னியர்கள்
திருவிழா முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தலித்துகள் மீது
கொடுரமான தாக்குதல் நடத்தினர்.
1. மூன்று(3) குடிசைகள் எரிக்கப்பட்டது,
2. கோவில் திருவிழா விளம்பர
பதகைகள் எரித்து நாசம் செய்து
விட்டனர்,
3. வன்னியர்கள் வீசிய வெடிகுண்டு 10 ஆம்
வகுப்பு தேர்வு எழுதியுள்ள . து.
இராஜ்குமார் என்கிற மாணவர் கையை
சிதைத்துள்ளது. மிக மோசமான நிலையில்
மாணவனின் கைவிரல்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை
சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது,
4. காவல்துறை வழக்கம்போல இருதரப்பு மீதும் வழக்கு பதிவு
செய்து கைதுசெய்துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட தலித்கள்
15 பேர் கைது.
5. தலித்துகள் வீடுகள் முற்றிலும் எரிந்த
நிலையில் வன்னியர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்
இருந்த கொட்டகைகளை தலித்துகள் எரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
கலவரத்தின் பின்னணி என்ன....
1. சர்ச்சைக்குறிய சாவடியை கலவரத்திற்கு அடுத்தநாள்
04.05.2015 அன்று மாவட்ட நிர்வாகம் சீல்
வைத்துள்ளனர். 4.04.2015 அன்று தடை உத்தரவு
போட்ட அன்றே வருவாய்துறை சம்மந்தபட்ட
சாவடியை பூட்டி சீல் வைக்கவில்லை.
2. பசும்பலூரில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது
என்று தெரிந்தும் காவல்துறை ஏன் கூடுதல் பாதுகாப்பு
வழங்கவில்லை. உளவுதுறை அதிகாரிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் என்ன செய்கிறார்கள்.
காடுவெட்டி குரு நடத்திய கூட்டம் |
அம்பலமானதும்
5. இப்போது ஊர் முழுக்க
போடப்பட்டிருந்த காவல்துறையில் கால்பங்காவது கலவரத்திற்கு முதல்நாள் போடப்பட்டிருந்தால் குடிசைகளில் குடியிருந்த தலித்துகளின் வீடுகளாவது காப்பாற்றப்பட்டிருக்கும்..
அப்பாவி தலித்துகள் மீது
வழக்கு போட்டு பிரச்னைக்கு கட்டபஞ்சாயத்து
செய்யும் இந்த பிரச்னையில் தேசிய
தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,மனித உரிமை
அமைப்புகள் போன்றவைகள் உடனடியாக தலையிட வேண்டும்…
ஊடகங்கள், பத்திரிகை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் உண்மையை
உலகத்திற்கு துணை நில்லுங்கள்.. முடிந்தால்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..
பசும்பலூர் மட்டுமல்ல பெரம்பலூர் மாவட்டம் அமைதி பூங்காவாக விளங்கட்டும்.
0 comments: